சென்னை, ஜன 11:தமிழக முதல் அமைச்சர் திரு மு கருணாநிதி, வரும் 26-ஆம் தேதி தர்மபுரியில்,ஜப்பான் நிதி உதவியுடன் நிறைவேற்றப்படவுள்ள ஒகனேகல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஒரு வாரகால ஜப்பான் பயணத்திற்குப் பின்னர் இன்று சென்னை திரும்பிய உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு மு க ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். 1334 கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்திற்கு, 85 சதவிகிதத் தொகையான 1141 கோடி ரூபாயை ஜப்பான் நாட்டு வங்கி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பெர் பயன் அடைவார்கள் என்றும் அவர் சொன்னார். திருச்சி மாவட்ட குடிநீர் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஜப்பான் வங்கி இசைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் புது தில்லியில் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
9700 கோடி ரூபாய் செலவிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, நிதி உதவி குறித்தும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
Feb 11, 2008
* Do not use semicolon(;)